தனுஷ்கோடி கடல் பகுதியில் 10 அடி உயரத்திற்கு எழும் அலை : சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை
Sep 21 2018 12:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடல் பகுதியில் 10 அடி உயரத்திற்கு அலைகள் எழும்புவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று காரணமாக, தனுஷ்கோடி பகுதியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்திற்கு எழும்புகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிக்கு செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். இதனையடுத்து அரிச்சல் முனைப்பகுதிக்கு செல்வதற்காக வருகைதரும் சுற்றுலா பயணிகள், தனுஷ்கோடி பகுதியுடன் தடுத்து நிறுத்தப்பட்டனர். பலத்த காற்று காரணமாக முத்திராயர் சத்திரம் முதல் அரிச்சல் முனைப்பகுதி வரை மணல் புயல் போல் வீசுவதால் சாலைகளில் இருசக்கர வாகனங்களிலும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் ராமேஸ்வரம் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை இரும்பு பலகைகள் அனைத்தும் கடலில் முழ்கின.
பாம்பன் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தை கடந்து செல்லும் ரயில்கள் அனைத்தும் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகின்றன.