கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக உறுப்பினர் சேர்க்கை முகாம் - ஆலோசனைக் கூட்டம் : ஏராளமானோர் கழகத்தில் இணைந்தனர்
Sep 21 2018 1:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தலின் பேரில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கழக உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஒன்றியக் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓ.பி.எஸ்-இ.பி.எஸ். அணி மற்றும் மாற்றுக் கட்சிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில், தஞ்சை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.மா. சேகர், கழக அமைப்புச் செயலாளர் திரு.சு.பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாநகர் மாவட்டக்கழகம் சார்பில் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. நெல்லை மாநகர் மாவட்டக்கழகச் செயலாளர் திரு.கல்லூர் இ.வேலாயுதம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கழகத்தில் அதிக இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்க வலியுறுத்தப்பட்டது. மேலும், நெல்லை நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில், தீவிர உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நாகை மாவட்டம், சிக்கல் கிராமத்தில் இருந்து ஈ.பிஎஸ்.-ஓபிஎஸ் அணியினர், தி.மு.க, தே.மு.தி.க, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி 100-க்கும் மேற்பட்டோர் கழகத்தில் இணைந்தனர். நாகை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.ஆர்.சந்திரமோகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன் கோடு தெற்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் முட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில், எடப்பாடி அணி மற்றும் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர், அக்கட்சிகளில் இருந்து விலகி, கழகத்தில் இணைந்தனர். கழக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக்கழகச் செயலாளருமான திரு.K.T. பச்சைமால் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.