திருப்பரங்குன்றம் தொகுதியில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை - அடிப்படை வசதிகளை செய்து தராமல் வரிகளை மட்டும் வசூல் செய்வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
Sep 21 2018 1:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில், குடிநீர் வசதி செய்து தரக்கோரி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு, பாபு நகர், கணேஷ் நகர் ஆகிய பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை குடிநீர் குழாய் இணைப்பை மாநகராட்சி வழங்கவில்லை. எனினும், சொத்து வரி, சாலை வரி வசூலிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். மாநகராட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும், குடிநீர் குழாய் இணைப்பை வழங்கக் கோரியும் ஏராளமானோர் மதுரை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.