திருச்சி மணப்பாறை தொகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு தம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள் : சரமாரியாக கேள்வி எழுப்பினர்
Sep 21 2018 1:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியில், மக்களவை துணை சபாநாயகர் திரு.தம்பிதுரையை முற்றுகையிட்ட பொதுமக்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
மணப்பாறை தொகுதிக்கு உட்பட்ட மேட்டுகடை உள்ளிட்ட கிராமங்களில் மனுக்களை பெறச் சென்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, இத்தொகுதியில் சாலை வசதி, குடிநீர் பராமரிப்பு உள்ளிட்டவை பல கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக கூறினார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தம்பிதுரையை முற்றுகையிட்ட பொதுமக்கள், அடிப்படை வசதிகளை செய்து தராமல், கமிஷன் பெற்றுக் கொண்டு வேலை செய்யாதீர்கள் என சரமாரியாக குற்றம் சாட்டினர். லஞ்சம் பெற்றுக் கொண்டு வேலையளிக்கும் இந்த ஆட்சி தேவையில்லை என்றும் கூறினர்.
இதேபோல், சின்னமணப்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் தம்பிதுரையை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.