மதுரை மாவட்டம் தேனூரில் பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியம் - 3 இளைஞர்கள் உயிர்தப்பினர்

Sep 21 2018 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மாவட்டம் தேனூர் அருகே பெரும் விபத்து ஏற்படவிருந்த நேரத்தில் ஓட்டுநர் கண்ணிமைக்‍கும் நேரத்தில் பேருந்தை நிறுத்தியதால், இளைஞர்கள் 3 பேரும் உயிர்தப்பினர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சோழவந்தான் வழியாக கருப்பட்டிக்‍கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து தேனூர் அருகே வந்தபோது, செக்‍கானூரணி ஊத்துப் பட்டியைச் சேர்ந்த மதுசூதனன், வினோத் மற்றும் சுகுமார் என்ற 3 இளைஞர்கள் வந்த இருசக்‍கர வாகனம் பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. கண்ணிமைக்‍கும் நேரத்தில் பேருந்து ஓட்டுநர் திரு. நாகேந்திரன் பேருந்தை நிறுத்தியதால், இளைஞர்கள் 3 பேரும் உயிர்தப்பினர்.

லேசான காயங்களுடன் இளைஞர்கள் 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டனர். இருசக்‍கர வாகனத்தை ஓட்டி வந்த மதுசூதனன் மீது சோழவந்தான் போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். துரிதமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநருக்‍கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00