மதுரை மாவட்டம் தேனூரில் பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியம் - 3 இளைஞர்கள் உயிர்தப்பினர்
Sep 21 2018 3:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் தேனூர் அருகே பெரும் விபத்து ஏற்படவிருந்த நேரத்தில் ஓட்டுநர் கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்தை நிறுத்தியதால், இளைஞர்கள் 3 பேரும் உயிர்தப்பினர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சோழவந்தான் வழியாக கருப்பட்டிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து தேனூர் அருகே வந்தபோது, செக்கானூரணி ஊத்துப் பட்டியைச் சேர்ந்த மதுசூதனன், வினோத் மற்றும் சுகுமார் என்ற 3 இளைஞர்கள் வந்த இருசக்கர வாகனம் பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து ஓட்டுநர் திரு. நாகேந்திரன் பேருந்தை நிறுத்தியதால், இளைஞர்கள் 3 பேரும் உயிர்தப்பினர்.
லேசான காயங்களுடன் இளைஞர்கள் 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மதுசூதனன் மீது சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். துரிதமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.