தி.மு.க. பாணியில் கடை ஊழியரைத் தாக்கும் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணி நிர்வாகி
Sep 21 2018 5:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரியில், ஈபிஎஸ், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், கடையில் பொருள் வாங்கிவிட்டு, பணம் தரமறுத்து, ஊழியரை தாக்க முயற்சிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில், ஈபிஎஸ், ஓபிஎஸ் அணியில் மாவட்ட பொறுப்பு வகிக்கும் ஜான் என்பவர், மதுபோதயில், அங்குள்ள டீ கடையில் பொருள் வாங்கியுள்ளார். பொருள் வாங்கியதற்கான 19 ரூபாயை கடைக்காரர் அவரிடம் கேட்டுள்ளார். ஆனால், பணத்தை கொடுக்காமல், ஊழியரைத் தரக்குறைவாக பேசி, தாக்க முயற்சித்துள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கடைகளில் புகுந்து அராஜகம் செய்யும் தி.மு.க.வினரின் பாணியில், தற்போது ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணியினரும் இறங்கியிருப்பதை இந்த வீடியோ காட்சி அம்பலப்படுத்தியுள்ளது.