கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் திருப்பூர் புறநகர் மாவட்டக் கழக நிர்வாகிகள் சந்திப்பு
Sep 21 2018 5:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, திருப்பூர் புறநகர் மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேரில் சந்தித்து, புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நான்காவது கட்ட மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணத்திற்காக, திருப்பூர் புறநகர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனுடன், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், காங்கேயம், தாராபுரம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதில், கோவை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. சேலஞ்சர் துரை, திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் திரு. சி. சண்முகவேலு, திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் திரு. சிவசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் பழனியப்பன் மற்றும் கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் திரு. குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.
கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, உடுமலை நகரச் செயலாளர் திரு. பாஸ்கரன், அவருடைய மகள் பிறந்தநாளையொட்டி குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.