புழல் மத்திய சிறை டிஐஜி வீட்டில் சோதனை : கைதிகள் பயன்படுத்திய 4 செல்போன்கள் பறிமுதல்
Sep 21 2018 6:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புழல் மத்திய சிறை டி.ஐ.ஜி முருகேசன் வீட்டில், சிறப்பு சோதனை குழுவினர் நடத்திய சோதனையில், கைதிகள் பயன்படுத்தி வந்த 4 செல்போன்கள், சிம் கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம் புழல் மத்திய சிறையில், கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாக புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக புழல் சிறையில் அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தனது சொந்த பணிக்காக கைதிகளை வீட்டுக்குள் அழைத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக, டி.ஐ.ஜி. முருகேசன் வீட்டில், புழல் மத்திய சிறை சிறப்பு சோதனை குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் கைதிகள் பயன்படுத்திய 4 செல்போன்கள், சிம் கார்டுகள் ஆகியவை அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. டி.ஜ.ஜி. முருகேசன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.