திண்டுக்கல்லில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலருடன் பிரபல ரவுடி தகராறு - சாலையில் கட்டிப்புரண்டு மோதலில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அச்சம்
Sep 21 2018 6:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல்லில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலருடன் மோதலில் ஈடுபட்ட ரவுடி கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வரும் பாண்டி என்பவர், பாரதிபுரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த பகுதியில் ராகவன் என்ற ரவுடியும், அவரது நண்பர் ரங்கனும் போதையில் தகராறில் ஈடுபட்டதை அறிந்த காவலர் பாண்டி, அவர்களை அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தார். அதைக் கேட்காத இருவரும், பாண்டியை கடுமையாக தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்த தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் ரவுடி ராகவனை கைது செய்தனர். பின்னர் காயம் அடைந்த காவலர் பாண்டியை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, தப்பியோடி மற்றொரு ரவுடியை காவல்துறையினர் தேடி வரும் நிலையில், கைதான ராகவன் மீது கொலை மற்றும் வழிபறி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.