கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், நாகை தெற்கு மாவட்டம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில், நாளை முதல், 3 நாட்களுக்கு 5-ம் கட்ட மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொள்கிறார். நாகை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கீழ்வேளூர், வேதாரண்யம், நாகப்பட்டினம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளிலும், திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியிலும் 23 இடங்களில் மக்களை சந்தித்து எழுச்சியுரை ஆற்றுகிறார்.
மாண்புமிகு அம்மாவின் மக்கள் நலக்கொள்கைகளை நிலைநாட்டிடும் வகையில், கழகத் தொண்டர்களின் பேரெழுச்சியோடும், பொதுமக்களின் பேராதரவோடும், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் விரோத, துரோக ஆட்சிக்கு முடிவுரை தீட்டி, தலைநிமிர்ந்த தமிழகம் படைத்திட, தமிழர் வாழ்வு மலர்ந்திட, மாண்புமிகு அம்மாவின் நல்லாட்சியை தமிழகத்தில் மீண்டும் அமைத்திடும் இலட்சிய வேட்கையோடு, நாகை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கீழ்வேளூர், வேதாரண்யம், நாகப்பட்டினம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளிலும், திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியிலும் 5-வது கட்டமாக, கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் நாளைமுதல், 3 நாட்களுக்கு மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொள்கிறார்.
அதன்படி, நாளை நடைபெறும் மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணத்தில், மாலை 4.30 மணிமுதல், இரவு 9.30 மணிவரை கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் தொகுதிகளுக்குட்பட்ட 8 இடங்களில் திரு. டிடிவி தினகரன், மக்களை சந்தித்து எழுச்சியுரை ஆற்றவுள்ளார். வேளாங்கண்ணியில் இருந்து, மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணத்தைத் தொடங்கும் திரு. டிடிவி தினகரன், கோவில்பத்து, செம்போடை, வேதாரண்யம், ஆயக்காரன்புலம், வாய்மேடு, கரியாப்பட்டினம், தலைஞாயிறு ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து எழுச்சியுரையாற்றுகிறார்.
வரும் செவ்வாய்க் கிழமையன்று கீழ்வேளூர் மற்றும் நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 8 இடங்களில் திரு. டிடிவி தினகரன், மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொள்கிறார். அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு திருக்குவளையில் தொடங்கி, வலிவலம், கீழ்வேளூர், சிக்கல், நாகப்பட்டினம், நாகூர், திட்டச்சேரி, திருமருகல் ஆகிய இடங்களில் திரு. டிடிவி தினகரன், மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொள்கிறார்.
வரும் புதன்கிழமையன்று, கீழ்வேளூர் மற்றும் திருத்துறைப் பூண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 7 இடங்களில் திரு. டிடிவி தினகரன் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அன்றைய தினம், மாலை 5.10 மணிக்கு திருப்பூண்டியில் தொடங்கி, திருத்துறைப் பூண்டி, எடையூர் சங்கேந்தி, முத்துப்பேட்டை, பெருகவாழ்ந்தான், கோட்டூர், விளக்குடி ஆகிய இடங்களில் திரு. டிடிவி தினகரன், மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொள்கிறார்.
தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக மற்றும் சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், கழகப் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பெருந்திரளாக இந்த மக்கள் சந்திப்புப் புரட்சிப் பயணத்தில் கலந்துகொள்கிறார்கள். கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க, கழகத் தொண்டர்களும், நிர்வாகிகளும், பொதுமக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.