மோனோகிராபி ஓவியத்தில் அசத்தும் திருப்பூர் பனியன் தொழிலாளி
Sep 29 2018 11:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மோனோகிராபி ஓவியத்தில் அசத்தும் திருப்பூர் பனியன் தொழிலாளிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
திருப்பூர் போயம்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், அதே பகுதியில் உள்ள பனியன் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர், வார்த்தைகள் மூலம் படம் வரையும் மோனோகிராபி முறையில் பல்வேறு ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார். ஆயிரத்து 330 திருக்குறள்களையும் உள்ளடக்கி திருவள்ளுவரின் ஓவியத்தையும், அக்னி சிறகுகள் புத்தகத்தின் வார்த்தைகளைக் கொண்டு அப்துல் கலாமின் ஓவியத்தையும், சத்திய சோதனை புத்தகத்தின் வார்த்தைகளைக் கொண்டு காந்தியடிகளின் ஓவியத்தையும் வரைந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.