5 நிமிடங்களில் 50 ஆயிரம் மூலிகை கன்றுகள் நடப்பட்டு கின்னஸ் சாதனை
Oct 18 2018 10:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, தென்மாநிலங்களிலுள்ள விமான நிலையங்களில், 5 நிமிடங்களில் 50 ஆயிரம் மூலிகை கன்றுகள் நடப்பட்டு, கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள 21 விமான நிலையங்களில் 5 நிமிடங்களில் 50 ஆயிரம் மூலிகை மரக்கன்றுகள் நடப்பட்டன. சென்னை மீனம்பாக்கத்திலுள்ள விமான நிலைய ஆணையக குடியிருப்பில் மூலிகை கன்றுகள் நடும் விழாவை தென்மண்டல விமான நிலைய இயக்குனர் ஸ்ரீகுமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வு, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.