கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கு : முக்கிய சாட்சியான பாதிரியார் மர்ம மரணம்

Oct 22 2018 6:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய சாட்சியான பாதிரியார் குரியாக்கோஸ் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

ஃபிராங்கோ முலக்கல் என்ற பாதிரியார் கேரளத்தில் பணியாற்றிய போது தன்னைப் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கன்னியாஸ்திரி ஒருவர் புகார் தெரிவித்தார். இதையடுத்து பிராங்கோ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கேரளக் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பிராங்கோ தற்போது பிணையில் வெளிவந்து பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ளார். பிராங்கோ மீது கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுத் தெரிவிப்பதற்கு உதவியதாகக் கூறப்பட்டவர் பாதிரியார் குரியாக்கோஸ். இந்த வழக்கில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருந்த அவர், பிராங்கோவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகள் பலர் தன்னிடம் புகார் கூறியதாகத் தெரிவித்திருந்தார்.

இதனால் தனக்கு பல முறை கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் குரியகோஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜலந்தர் மாவட்டத்தில் போக்பூரில் உள்ள தேவாலயத்தில் தனது அறையில் பாதிரியார் குரியாக்கோஸ் இறந்து கிடந்தார். பிராங்கோவுக்கு எதிரான சாட்சியம் என்பதால் குரியாக்கோஸ் கொல்லப் பட்டிருக்கலாம் என அவரின் சகோதரர் ஜோஸ் தெரிவித்துள்ளார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகத் தன்னிடம் தனது சகோதரர் ஏற்கனவே தெரிவித்ததாகவும் ஜோஸ் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00