நாகையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூட்டத்தில் செருப்பு வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு
Oct 22 2018 5:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்ற கூட்டத்தில் செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினத்தில் அமைச்சர் ஓ.எஸ் மணியன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தகுதியற்ற நபர்களுக்கு பதவி வழங்குவதாக குற்றச்சாட்டிய அதிமுக தொண்டர் மகேஷ் என்பவர், நாகை நகர செயலாளர் தங்ககதிரவன் மீது செருப்பை வீசிய சம்பவம் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்த செருப்பை வீசிய தொண்டர் மீது எடப்பாடி அணியினர் தாக்குதல் நடத்தினர். பின்னர் அங்கு வந்த போலீசார் தொண்டர் மகேஷை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், செருப்பு வீசிய நபர் கீழையூர் ஒன்றியம் கொளப்பாடு கிராமத்தை சேர்ந்த மகேஷ் என்பதும், கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் செருப்பு வீசியதும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன், காலியாக கிடந்த இருக்கைகளை பார்த்து பேசிக்கொண்டிருந்ததார். அதனை அங்கிருந்த ஒருசிலர் ஆதங்கத்தோடு பார்த்து சென்றனர்.