திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : ஆசிரியருக்கு தர்ம அடி
Oct 22 2018 6:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பிடித்து பொதுமக்களே தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம் சேந்த மங்கலம் பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகளான வித்யா கன்னக் குருக்கை பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இதே பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் கண்ணன் என்பவர், வித்யாவிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பொதுமக்கள், கண்ணனை பள்ளி வளாகத்திலேயே அடித்து உதைத்தனர்.