உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் வரும் 26-ம் தேதி விசாரணை - உச்சநீதிமன்றம் உத்தரவு
Oct 23 2018 3:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் வரும் 26ம் தேதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் எடப்பாடி பழனிசாமி அரசு காலதாமதம் செய்து வருகிறது. எனவே உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பான விசாரணையின் போது தமிழக அரசின் மெத்தனப் போக்கிற்கு உயர்நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிபடுத்தி இருந்தது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணை வரும் 26-ம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.