Me Too விவகாரம் தொடர்பாக வெளியாகும் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கிறது : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தகவல்
Oct 23 2018 3:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
Me Too விவகாரம் தொடர்பாக வெளியாகும் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிப்பதாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சினிமா துறை பெண்களை மதிக்கும் துறையாக இருக்கவே விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். Me Too விவகாரம் தொடர்பாக வெளியாகும் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரகுமான், பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களை கேட்கும்போது அதிர்ச்சியாக உள்ளது எனக் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குரல் ஓங்கி ஒலிக்க சமூக வலைதளங்கள் பெரும் சுதந்திரத்தை அளித்திருப்பதாகவும், பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியத்துடன் முன் வரவேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.