105 வயதில் சமையல் கலைஞராகப் பணியாற்றும் முதுபெரும் சாதனையாளர்
Oct 26 2018 5:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
105 வயதிலும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் சமையல் கலைஞராகப் பணியாற்றி வரும், கொடைக்கானலைச் சேர்ந்த முதுபெரும் சாதனையாளர், அனைவரையும் வியப்பில் மூழ்கடித்துள்ளார்.
கொடைக்கானல் அண்ணாநகரில் வசித்துவரும் தேவராஜ், அங்குள்ள ஒரு தனியார் பள்ளியின் தலைமை சமையல் கலைஞர். 34 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வரும் இவர், 14 குழந்தைகளின் தந்தை. 94 வயதில் இவரது மனைவி சமீபத்தில் காலமானார். வீட்டிலிருந்து நாள்தோறும் 2 கிலோமீட்டர் நடந்தே பள்ளிக்கு வருகிறார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில், மதுரையில் பிறந்து, கொடைக்கானலில் குடியேறிய தேவராஜ், அண்ணாநகரில், தனது மகள் திருமதி. ஈவனுடன் தற்போது வசித்து வருகிறார்.
முதுமையிலும் இளமைத் துடிப்புடன் சுழன்றுவரும் இவரது பணியைப் பாராட்டி, கொடைக்கானல் செஞ்சிலுவை சங்கம் தங்க மோதிரமும், வெள்ளி நாணயமும் அளித்து கௌரவித்தது.