கஜா புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை : தயார் நிலையில் 2 மீட்பு கப்பல்கள்
Nov 15 2018 3:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கஜா புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக இரண்டு மீட்பு கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கஜா புயல் காரணமாக சேதம் ஏற்படும் என கண்டறியப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீட்பு கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இன்று மாலை கரையை கடக்கும் கஜா புயலால் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் , புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டங்களிலும் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மீட்புப் பணிக்காக 2 கடற்படை கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன. அவசர காலத்தில் உதவும் பொருட்களுடன் கடற்படையின் ரன்வீர், கன்ஜர் கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன. மீட்புப் படையினர், ரப்பர் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவக்குழு, மருத்துவ பொருட்கள், நிவாரண பொருட்களுடன் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மீட்புப் படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.