கஜா புயல் நெருங்கி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

Nov 15 2018 3:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

கஜா புயல் நெருங்கி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 3 நாட்களாக கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த 'கஜா' புயல் இன்று இரவு 11.30 மணிக்கு கடலூர் - பாம்பன் இடையே நாகைக்கு அருகே கரையை கடக்கிறது.

இதனால், சென்னை, புதுச்சேரி, நாகை, கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை எழிலகத்தில் புயல் மற்றும் பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தகவலை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் புயல் காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் என கண்டறியப்பட்டுள்ள இடங்களில் உள்ள 86 ஆயிரம் பேர் இன்று பிற்பகலுக்குள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கவும், பாதுகாப்பு கருதி வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும், தமிழக அரசின் நாகை மாவட்ட சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் இலவச அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 1077, 04142 - 220700, 221113, 233933, 221383 ஆகிய எண்களில் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00