அருப்புக்கோட்டையில் ஒரே வாரத்தில் சேதமடைந்த புதிய சாலைகள் : சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் என பொதுமக்கள் எச்சரிக்கை
Nov 15 2018 3:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புதிதாக போடப்பட்ட சாலை ஒரு வாரத்திலேயே பெயர்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அடுத்த உடையநாதபுரம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருந்ததால் புதிய சாலை அமைக்க கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த சாலை அமைக்கும் ஒப்பந்தத்தை, எடப்பாடி அணியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் மேற்கொண்டார். ஆனால் சாலை போட்டு ஒரு வாரமே ஆனநிலையில் ஆங்காங்கே சாலைகள் பெயர்ந்துள்ளதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். கொள்ளை லாபம் சம்பாதிக்கும் நோக்கில் தரமற்ற சாலை போடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சேதமடைந்துள்ள சாலையை மீண்டும் சீரமைத்து தர வேண்டும் என்றும், தவறினால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.