பாலியல் கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆறுதல் : சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
Nov 16 2018 3:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கலந்து கொண்டார்.
பாப்பிரெட்டிபட்டி ஒன்றிய கழக துணைச்செயலாளர் திரு. கே. ஜெயராமன் மகனுக்கு, அண்மையில் திருமணம் நடைபெற்றதையொட்டி, திரு. டிடிவி தினகரனை, விவேகானந்தன்- விஜயதாரனி தம்பதியினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அரூர் சித்தேரிமலை முள்ளேரிகாடு கழக கிளைச் செயலாளர் திரு. குமார் - ரஞ்சிதா தம்பதியினர், அண்மையில் திருமணம் நடைபெற்றதையொட்டி, திரு. டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் குமார், அண்மையில் திருமணம் நடைபெற்றதையொட்டி, திரு. டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பாப்பிரெட்டிபட்டியில், கழக நிர்வாகி திரு. கலையரசன்-நிவேதா தம்பதியினரின் பெண்குழந்தைக்கு, மைவிழி என, திரு. டிடிவி தினகரன் பெயர் சூட்டினார்.
அரூர் பொய்யாப்பட்டி பகுதியில் திரு.டிடிவி தினகரனுக்கு கழகத் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அரூர் பையார் நாயிக்கம்பட்டி பகுதியில் திரு.டிடிவி தினகரனுக்கு கழக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அரூர், சிட்லிங் மலைக்கிராமத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரை கழக துணைப்பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், காவல்துறையும், அரசும் முறையாக நடந்துகொள்ள வேண்டும் என்றும், சம்பந்தபட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.