திருப்போரூரில் எடப்பாடி அரசைக் கண்டித்து நடைபெறும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க வரும் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்
Nov 16 2018 7:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், வரும் 18-ம் தேதி திருப்போரூரில், எடப்பாடி அரசைக் கண்டித்து நடைபெறும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க வரும் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மத்திய மாவட்டக் கழகம் சார்பில், தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராத எடப்பாடி அரசைக் கண்டித்து, வரும் 18-ம் தேதி மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் திருப்போரூரில் நடைபெறுகிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நிறைவுரையாற்ற வரும் கழக துணை பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்கு, சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழகம் சார்பில், மடிப்பாக்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளர் மடிப்பாக்கம் திரு. ராஜேந்திரன், பல்லாவரம் நகராட்சி செயலாளர் திரு. கே.ஜி. சிங்காரம், பம்மல் நகர கழகச் செயலாளர் திரு. ஜெயகோபி பிரேம் வேல்ராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.