சென்னை அருகே கொத்தடிமைகளாக இருந்த 7 சிறுமிகள் உட்பட 11 பேர் மீட்பு
Nov 16 2018 5:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை அருகே கொத்தடிமைகளாக இருந்து வந்த 7 சிறுமிகள் உட்பட 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த வைரவங் குப்பத்தில், திரிசங்கு என்பவர் மரங்களை வெட்டி, அதன்மூலம் அடுப்புக் கரி தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இங்கு பணிபுரியும் வேலையாட்கள் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரையடுத்து பொன்னேரி கோட்டாட்சியர் நந்தகுமார் அதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார். அப்போது 7 ஏழு சிறுமிகள் உட்பட 11 பேர் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இவர்கள் பழவேற்காட்டை அடுத்த செஞ்சியம்மன் நகரை சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த 3 ஆண்டுகளாக குறைந்த கூலி பெற்று, அடிப்படை வசதிகளின்றி கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வந்ததும் கோட்டாட்சியர் விசாரணையில் உறுதியானது. இதனைத்தொடர்ந்து அவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.