கும்பகோணத்தில் மன நலம் பாதித்த பெண்ணை குணப்படுத்த இயலாததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலைக்கு முயற்சி
Nov 16 2018 5:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மன நலம் பாதித்த பெண்ணை குணப்படுத்த இயலாததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தையடுத்த ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மனநலம் பாதிக்கப்பட்ட மகள் புவனேஸ்வரிக்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும், அவரை குணப்படுத்த இயலாததால், புவனேஸ்வரி உள்ளிட்ட 5 பேரும் எலி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். இதையடுத்து மயங்கி விழுந்த 5 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.