நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டு விழுந்து கிடக்கும் மரங்கள் மற்றும் மின்கம்பங்களை சீரமைக்க, அப்புறப்படுத்த 36 மணிநேரத்திற்கும் மேலாகும் : மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
Nov 16 2018 6:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விழுந்து கிடக்கும் மரங்கள் மற்றும் மின்கம்பங்களை சீரமைக்கவும் அப்புறப்படுத்தவும் 36 மணிநேரத்திற்கும் மேலாகும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று அதிகாலை கரை கடந்தபோது, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக நாகை மாவட்டம் பெரும் பாதிப்புக்குள்ளானது. வேதாரண்யம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் போன்ற இடங்களில் ஏராளமான மரங்களும், நூற்றுக்கணக்கான மின்கம்பங்களும் காற்றில் சாய்ந்து விழுந்தன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனைக் கணக்கெடுக்கும் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை முடிக்க 36 மணிநேரம் பிடிக்கும் என மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரி திரு. தென்காசி ஜவஹர் தெரிவித்துள்ளார்.