எடப்பாடி பழனிசாமி அரசு மீதான ஊழல் புகார் குறித்த வழக்கு : உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிப்பு

Dec 12 2018 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆசிரியர் பொது இடமாறுதலில், எடப்பாடி பழனிசாமி அரசு மீதான ஊழல் புகார் குறித்த வழக்‍கில் நாளை இடைக்‍கால உத்தரவு பிறப்பிக்‍கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை அறிவித்துள்ளது.

2018-2019-ம் ஆண்டுக்‍காக நடத்தப்பட்டு வரும் ஆசிரியர் பொது இடமாறுதலில், பெருமளவில் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதாகவும், பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்‍காக கோடிக்‍கணக்‍கில் லஞ்சப் பணம் வசூலிக்‍கப்பட்டதாகவும் புகார் தெரிவித்து மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளையில் மனு ஒன்றைத் தாக்‍கல் செய்திருந்தார். ஆசிரியர் பொது இடமாறுதலுக்‍கு தடைவிதிக்‍க வேண்டும் என்றும், லஞ்ச முறைகேடு குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்‍கு உத்தரவிட வேண்டும் என்றும் இந்த மனுவில் அவர் கோரிக்‍கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதிகள் திரு. சசிதரன் திரு. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, நாளை இந்த வழக்‍கில் இடைக்‍கால உத்தரவு பிறப்பிக்‍கப்படும் என அறிவித்து அன்றைய தினத்திற்கு வழக்‍கு விசாரணையை ஒத்தி வைத்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00