அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் என்றுமே உணர்வுள்ள தொண்டனாக இருப்பேன் : கழக தலைமை நிலையச் செயலாளர் P. பழனியப்பன் பேட்டி
Dec 12 2018 3:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில், என்றுமே உணர்வுள்ள தொண்டனாக இருப்பேன் என்று கழக தலைமை நிலையச் செயலாளர் திரு. P. பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கழகத்தின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் வீண் வதந்தியை பரப்பி வருவதாக தெரிவித்தார். மேகதாது அணை பிரச்சினையில் தமிழக அரசின் செயலற்ற தன்மை வெளிப்பட்டு விட்டதாகவும் திரு.பி.பழனியப்பன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.