தஞ்சை பெரிய கோயிலில் யோகா நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என தொல்லியல் துறை விளக்‍கம் - உரிய ஆவணங்களை தாக்‍கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவு

Dec 12 2018 6:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சை பெரிய கோயிலில் யோகா நிகழ்ச்சி நடத்த வாழும் கலை அமைப்புக்‍கு அனுமதி வழங்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளையில் தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் சார்பில், தஞ்சை பெரிய கோயிலில் மிகப்பெரிய தியான நிகழ்ச்சிக்‍கு அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நடத்தினால், இக்‍கோயிலின் பாரம்பரியத்திற்கும், பொலிவிற்கும் பாதிப்பு ஏற்படும் எனக்‍கூறி, அதற்கு எதிராக வழக்‍கு தொடுக்‍கப்பட்டது. இந்த வழக்‍கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை, தியான நிகழ்ச்சிக்‍கு உடனடியாக தடை விதித்தது. மேலும், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், தொல்லியல்துறை அதிகாரி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது. இந்த வழக்‍கு இன்று மீண்டும் விசாரணைக்‍கு வந்தபோது தொல்லியல்துறை சார்பில் ஆஜரான வழக்‍கறிஞர், பஜனை நிகழ்ச்சிக்‍கு மட்டுமே தாங்கள் அனுமதி வழங்கியதாக தெரிவித்தார். கோயில் வளாகத்திற்குள் பந்தல் அமைக்‍கவோ, நிகழ்ச்சி நடத்தவோ எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும் வாதிட்டார். இதைகேட்ட நீதிபதிகள், அனுமதி தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்‍க உத்தரவிட்டனர். தொல்லியல்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00