மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசுக்கு தஞ்சை விவசாயிகள் கடும் கண்டனம் - ரத்து செய்ய வலியுறுத்தி பேரணி
Dec 18 2018 6:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டுவதற்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூரில் விவசாயிகள் பேரணி நடத்தினர்.
தஞ்சாவூரில், காவிரி உரிமை மீட்பு குழுவின் சார்பில் நடைபெற்ற கண்டன பேரணியில், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டக் கூடாது, மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என்று கோஷங்களை எழுப்பினர். மேலும், தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், தமிழக எம்பிக்கள் பதவி விலகி கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர்.