தருமபுரியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் குளம் போல் தேங்கிய மழைநீரில் நடந்து சென்று வகுப்புக்குள் செல்லும் மாணவர்கள் - தொற்றுநோய் பரவும் அபாயம்
Aug 19 2019 4:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தருமபுரியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மழைநீர் தேங்கி பள்ளி வளாகம் குளம் போல் காட்சியளிக்கிறது.
தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 850 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் பெய்த தொடர்மழையால், பள்ளி வளாகத்தில் இருந்து மழைநீர் வெளியேற வழியில்லாமல் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் தண்ணீர் நடந்தபடி வகுப்புக்குள் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வி துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இனி தொடர்ந்து மழை காலம் என்பதால், இதேபோல் தொடர்ந்து மழைநீர் தேங்கினால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படும் என அவர்கள் வேதனை தெரிவித்தனர்.