ப.சிதம்பரத்திற்கு எதிரான சி.பி.ஐ. நடவடிக்‍கையைக்‍ கண்டித்து சென்னையில் காங்கிரசார் போராட்டம் - சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் நூற்றுக்‍கும் மேற்பட்டோர் கைது

Aug 22 2019 8:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

முன்னாள் மத்திய நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக்‍ கண்டித்து, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப.சிதம்பரம், சி.பி.ஐ. அதிகாரிகளால் டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்டார். மத்திய பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்‍கையைக்‍ கண்டித்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல், காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில், சென்னை அண்ணாசாலை தாராபூர் டவர் அருகே அக்‍கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்ததை கண்டித்து, திருப்பூரில், திருப்பூர் குமரன் சிலை அருகில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர் மத்திய அரசின் குறைகளை பேசுவதால் அவர் மீது பழி வாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுவதாக குற்றம்சாட்டினர். செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00