திருவள்ளூர் அருகே 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு - இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி திர்ப்பு

Aug 23 2019 9:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவள்ளூர் அருகே 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அடுத்த அன்னம்பேடு பகுதியில், கடந்த ஆண்டு, செங்கல் சூளையில் பணியாற்றி வந்த செல்வி என்பவரின் 8 வயது மகளை, கிருஷ்ணா என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, கிருஷ்ணா என்ற இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், அத்துமீறி வீட்டிற்குள் புகுந்த குற்றத்திற்காக 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 7 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00