ஓசூர் பகுதியில் உள்ள இரண்டு காட்டுயானைகளை பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு
Aug 23 2019 12:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஓசூர் பகுதியில் உள்ள இரண்டு காட்டுயானைகளை பிடிக்க, இரண்டு கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கெலவரப்பள்ளி அணைப்பகுதி, பாகலூர் பகுதிகளில், கொம்பன், மார்க் ஆகிய காட்டுயானகைள், விளைநிலங்களை சேதப்படுத்தியும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வந்தன. இந்த யானைகளை விரட்ட, வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. இந்தநிலையில், மயக்க ஊசி செலுத்தி காட்டு யானைகளை பிடிக்க, பரணி மற்றும் மாரியப்பன் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. காட்டுயானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க, 2 பேர் கொண்ட மருத்துவக்குழுவும், யானைகளை பிடிக்க ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, அஞ்செட்டி ஆகியவனக்கோட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்ப்பட்ட வனத்துறையினரும், கதிரேப்பள்ளி என்னுமிடத்தில் தயார் நிலையில் உள்ளனர்.