சீர்காழியில் ஒரே பள்ளியில் 50-ற்கும் மேற்பட்ட இரட்டையர்கள் - அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வித்தியாசமான பள்ளி
Aug 23 2019 12:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம், சீர்காழியில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் இரட்டை குழந்தைகள் அதிக அளவில் கல்வி கற்பதால், அப்பள்ளி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சீர்காழியிலுள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை,50-ற்கும் மேற்பட்ட இரட்டையர்கள் பயின்று வருகின்றனர். தேர்வுகளில் ஒரே மதிப்பெண் வாங்குவது, ஒரே விதமான திறமைகளுடன் விளங்குவது என இரட்டையர்கள், ஆசிரியர்களையும், சக நண்பர்களையும் வியப்பில் ஆழ்த்துகின்றனர். இரட்டையர்களை வெவ்வேறு பிரிவுகளுக்கு மாற்றினால், உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்பதால், ஒரே பிரிவிலேயே அவர்களை அனுமதிக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.