தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பது உண்மைதான் - சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் தகவல்
Aug 23 2019 12:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளது உண்மைதான் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.விசுவநாதன் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளில், 3 பேரின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தனியார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.விசுவநாதன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரு. விஸ்வநாதன், தீவிரவாதிகள் ஊடுருவல் உண்மைதான் என்றும், நேற்று கிடைத்த தகவலின் அடிப்படையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில் சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஸ்டாமிங் ஆப்பரேஷன் உள்ளிட்ட பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தமிழகத்தில் ஊடுருவி உள்ள லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும், 5 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. அதில், 3 தீவிரவாதிகளின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது.