ஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறுமி
Aug 25 2019 3:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவி, ஆசிய அளவில் நடைபெற்ற நடன போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தென்கொரியாவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப் போட்டியில் சீனா, தைவான், கொரியா, கிரீஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவிலிருந்து சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பாலாஜி - ஜெயபிரதா தம்பதியரின் 8 வயது மகள் ரக்க்ஷனா, மேற்கிந்திய நடனப் போட்டியில் பயிற்சி பெற்று, போட்டியில் கலந்து கொண்டார். இதில் ஒரு நிமிடம் 40 வினாடிகளில் அனைத்து விதமான நடன அசைவுகளையும் நடனமாடி, முதல் பரிசை பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
மேற்கிந்திய நடன போட்டியில் தங்கம் வென்ற சிறுமியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.