நெல்லையில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் - கழக பொதுச் செயலாளருக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக ஆலோசனை
Aug 26 2019 8:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சங்கரன்கோவிலில், மாமன்னர் பூலித்தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்கு, உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள நெற்கட்டும் செவலில், மாமன்னர் பூலித்தேவரின் 304-வது ஜெயந்தி விழா செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்கே வருகை தரும் கழகப் பொதுச் செயலாளர் திரு. TTV தினகரனுக்கு வரலாறு காணாத வண்ணம் வரவேற்பு அளிப்பது குறித்து கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சங்கரன்கோவில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட பொருப்பாளர் திரு. பால்கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநகர் மாவட்ட பொருப்பாளர் திரு. பரமசிவ ஐயப்பன், மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளர் திரு.ஆவின் அன்னசாமி, மகளிர் அணி மாவட்ட செயலாளர் திருமதி ராம்சன் உமா, சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட செயலாளர் திரு. தாழைமீரான் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.