ஜம்மு காஷ்மீருக்கு ராகுல்காந்தி செல்வதால் மாற்றம் ஏற்படபோவதில்லை : தமிழிசை சவுந்தரராஜன்
Aug 26 2019 8:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு திரு. ராகுல்காந்தி செல்வதால், எந்தவொரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை என தமிழக பாஜக தலைவர் திருமதி. தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகின்ற நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.