கடல் கொந்தளிப்பு காரணமாக மணலால் மூடப்பட்ட அழிகால் கிராமம் : மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு அலட்சியம் காட்டுகின்றன - வசந்தகுமார் குற்றச்சாட்டு
Aug 26 2019 9:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கடல் கொந்தளிப்பு காரணமாக, மணலால் மூடப்பட்ட அழிகால் மீனவ கிராமத்தை, ஒரு வாரமாகியும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிடவில்லை என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வசந்தகுமார் குற்றம்சாட்டியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு சார்பில் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை உடனடியாக பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.