ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே மீண்டும் ரயில் சேவை : ரயில்வே அதிகாரிகள், ஐஐடி பொறியாளர்கள் ஆய்வு
Aug 26 2019 9:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
55 ஆண்டுகளுக்கு பின் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே மீண்டும் ரயில் போக்குவரத்தை துவக்குவதற்காக, சென்னை ஐஐடியை சேர்ந்த பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
வங்கக் கடலில் கடந்த 1964ம் ஆண்டு ஏற்பட்ட புயலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி முற்றிலும் அழிந்துபோனது. தனுஷ்கோடிக்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில், கடந்த 2017ம் ஆண்டு சாலைவசதி மட்டும் அமைக்கப்பட்டன. புயல் தாக்கி 54 ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் ரயில் போக்குவரத்தை துவக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.208 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் சென்னை ஐஐடியை சேர்ந்த பொறியாளர்கள் ராமேஸ்வரம் ரயில் நிலையம் முதல் கரையூர், தெற்குகரையூர், ஜடாமகுட தீர்த்த கோயில், முகுந்தராயர் சத்திரம் வழியாக தனுஷ்கோடி வரை பழைய ரயில் பாதை சென்ற வழித்தடத்தில் ரயில்வே நிலத்தை ஆய்வு செய்து, சர்வே செய்யும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றன.