இளைஞர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த முயற்சி : நடைபயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் சிறிய நூலகம் திறப்பு
Aug 26 2019 12:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காக சென்னை திருவொற்றியூரில், நடைபயிற்சி செய்யும் இடத்தில் சிறிய நூலகம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்ட் மோகத்தால் சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கும் இளைஞர்களிடமும், பொதுமக்களிடமும் வாசிக்கும் பழக்கம் குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில், திருவொற்றியூர் கிளை நூலகம் சார்பில், மக்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விளையாட்டு திடலில் நடைபயிற்சி மேற்கொள்ள வருபவர்களிடம் ஓய்வு நேரத்தில் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக அப்பகுதியில் சிறிய அளவிலான தற்காலிக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நடைபயிற்சி மேற்கொள்பவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.