புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை கலைவிழா : ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
Aug 26 2019 12:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து நடத்திய வாராந்திர கலைவிழாவை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி திடலில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் பல்வேறு வாராந்திர கலை விழா நடைபெற்று வருகிறது. நேற்றிரவு நடைபெற்ற கலைவிழாவில் கிராமிய மணம் கமழும் நாட்டுப்புற பாடல்கள் பாடப்பட்டது. தொடர்ந்து ஒற்றைக் கொம்பு சுற்று குத்துவரிசை, மான் கொம்பு சண்டை உள்ளிட்ட வீர விளையாட்டுகள் நடத்தப்பட்டன. இந்த கலை விழாவை ஏராளமான பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கண்டு ரசித்தனர்.