பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன
Sep 16 2019 7:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் மேல்மலையனூரில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கழக அமைப்பு செயலாளர் திரு.கணபதி, விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.கெளதம் சாகர், தலைமைக் கழக பேச்சாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்பொதுக் கூட்டத்தில் கொடியம் புதூர், பாஞ்சாலம், அவ்வையார்குப்பம், கொள்ளார், தென் ஆலப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து தி.மு.க., பாமக, தே.மு.தி.க. கட்சிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி கழகத்தில் இணைந்தனர்.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் சங்கராபுரத்தில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் திரு.உடுமலை கே.ஜி. சண்முகம், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.கோமுகி மணியன், தலைமைக் கழக பேச்சாளர்கள் திரு.டேவிட் பிரவீன்குமார், திரு.மீசை இளங்கோ உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் ஏராளமான கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.