பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு அரசுத்தரப்பில் ஆறுதல் கூட தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது - தொல் திருமாவளவன் குற்றச்சாட்டு
Sep 16 2019 8:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு அரசுத்தரப்பில் ஆறுதல் கூட தெரிவிக்காதது வருத்தம் அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திரு.தொல் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னை குரோம்பேட்டை பவானிநகரில் சுபஸ்ரீயின் தந்தை ரவி மற்றும் தாயார் கீதாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு.திருமாவளவன், பேனர் குறித்து உரிய சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே காவல் துறையினர் அதை வழிநடத்த முடியும் என கூறினார்.