10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான திருத்தப்பட்ட தேர்வுகால அட்டவணை - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு
Sep 16 2019 8:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான திருத்தப்பட்ட தேர்வுகால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2019-2020ம் கல்வியாண்டுமுதல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப் பாடத்திற்கான இருதாள்களாக தேர்வெழுதும் நடைமுறையை ஒருங்கிணைத்து, ஒரே தாளாக தேர்வு நடத்திடும் வகையில், பொதுத்தேர்வுக்கான திருத்தப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 13-ம் தேதி முடிவடையும் என்றும், தேர்வு முடிவு மே மாதம் 4-ம் தேதி வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி மொழிப்பாடம், மார்ச் 28-ம் தேதி விருப்பமொழிப் பாடம், மார்ச் 31-ம் தேதி ஆங்கிலம், ஏப்ரல் 3-ம் தேதி சமூக அறிவியல், ஏப்ரல் 7ம் தேதி அறிவியல், ஏப்ரல் 13ம் தேதி கணிதம் பாடத்திற்கான தேர்வு நடைபெறும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.