சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : காலிஸ்தான் பிரிவினைவாத குழுவின் பெயரில் மிரட்டல் கடிதம்
Sep 17 2019 9:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இம்மாதம் 30ம் தேதி வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு கடந்த 9ம் தேதி கடிதமொன்று வந்துள்ளது. டெல்லியை சேர்ந்த ஹதர்ஷன் சிங் நாக்பால் என்பவர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். கடிதத்தில், தான் காலிஸ்தான் பிரிவினைவாத குழுவை சேர்ந்தவர் என்றும், தனது மகனுடன் சேர்ந்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வரும் 30ம் தேதி வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல்துறை ஆணையர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைமை பதிவாளரை, உயர் நீதிமன்ற பதிவாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.