பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் : கழகத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்கள் - கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்பு

Sep 17 2019 9:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாளை முன்னிட்டு, கழகத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் பொதுக்‍கூட்டங்கள் நடைபெற்றன. இதில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தென்சென்னை வடக்கு மாவட்டம் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்‍ கழகம் சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்றது. தென்சென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.சுகுமார் பாபு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதிக்‍ கழகச் செயலாளர் திரு.சேப்பாக்கம் ராஜேந்திரன், கழக வர்த்தக அணி செயலாளர் திரு.சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில், ஆரணி பஜாரில் பேரறிஞர் அண்ணா​ பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.பொன்ராஜா, கழக மீனவரணி செயலாளர் திரு.டி. ஆறுமுகம், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் திரு.கே. குமார், மகளிர் அணி துணைச் செயலாளர் காவேரி உள்ளிட்டோர் பங்கேற்று, மக்கள் விரோத எடப்பாடி அரசின் அவலங்களை பட்டியலிட்டனர்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் மேலூர் பகுதியில் பொதுக்‍கூட்டம் நடைபெற்றது. மாவட்டக்‍கழகச் செயலாளர் திரு.செ.சரவணன், கழக அமைப்புச் செயலாளர் திரு.வ.து.நடராஜன், கழக எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் திரு.பரமநாதன், தலைமைக்‍ கழக பேச்சாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இக்‍கூட்டத்தில் அண்ணாவின் பெருமைகள், மக்கள் விரோத மத்திய-மாநில அரசுகளின் அவலங்கள் மற்றும் கழகத்தின் கொள்கை, செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்‍கப்பட்டது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக்‍ கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்‍கூட்டம் சூளகிரியில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.மாதேவா, கழக அமைப்பு செயலாளர் திரு.ஏழுமலை, கழக செய்தி தொடர்பாளர் திரு.இளந்தமிழ் ஆர்வலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக்‍கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்‍கூட்டம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.கணேஷ் குமார், அம்மா தொழிற்சங்கப் பேரவை தலைவர் திரு.வியாசர்பாடி ராஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாற்று கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கழகத்தில் இணைந்தனர்.

பெரம்பலூரில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் திரு.எஸ்.கார்த்திகேயன், கழக அம்மா பேரவை செயலாளர் திரு.எஸ். மாரியப்பன் கென்னடி, தலைமை கழக பேச்சாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நெல்லை மாவட்டம், நெல்லை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நெல்லை டவுனில் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளர்கள் திரு.மண்டபம் முனியசாமி, திரு.பால் கண்ணன், நெல்லை மாநகர் மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு.பரமசிவ ஐயப்பன், நெல்லை மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ​திரு.சுரேஷ்குமார் மற்றும் தலைமை கழக பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00