கடலூர் மாவட்டத்தில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 20-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் காயம்

Sep 17 2019 1:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, தனியார் கல்லூரி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்‍குள்ளானது. இதில் 20-க்‍கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.

திட்டக்குடி அடுத்த தொழுதூர் அருகே இயங்கிவரும் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிக்‍குச் சொந்தமான பேருந்தில், 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை கருவேப்பிலங்குறிச்சி பகுதியிலிருந்து ஏற்றிக்கொண்டு கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது. தொழுதூர் அருகே திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் 25 மாணவ-மாணவிகள் காயமடைந்தனர். பேருந்து கவிழ்ந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக மாணவ-மாணவிகளை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த பாக்கியலட்சுமி, சுடர்விழி, சுபிதா, விஸ்வநாதன் ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்‍கப்பட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00