கடலூர் மாவட்டத்தில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 20-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் காயம்
Sep 17 2019 1:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, தனியார் கல்லூரி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.
திட்டக்குடி அடுத்த தொழுதூர் அருகே இயங்கிவரும் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்தில், 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை கருவேப்பிலங்குறிச்சி பகுதியிலிருந்து ஏற்றிக்கொண்டு கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது. தொழுதூர் அருகே திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் 25 மாணவ-மாணவிகள் காயமடைந்தனர். பேருந்து கவிழ்ந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக மாணவ-மாணவிகளை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த பாக்கியலட்சுமி, சுடர்விழி, சுபிதா,
விஸ்வநாதன் ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.