புதுச்சேரியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் : இந்தியன் வங்கி ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்பு
Sep 17 2019 1:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், புதுச்சேரியில், காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், எழுத்தர் பணியிடம் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் - பதவி உயர்வு வழங்க வேண்டும், கருணை அடிப்படையிலான வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை, கொக்கு பார்க் அருகில் உள்ள இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் கோஷங்களை எழுப்பினர்.